பதிவு கட்டாயம் ! இல்லையேல் அரச நிவாரணங்கள் கிடையாது : சுற்றுலாத்துறை அமைச்சர்

Published By: R. Kalaichelvan

01 Dec, 2020 | 12:45 PM
image

(க.பிரசன்னா)

நாட்டிலுள்ள சுற்றுலா சேவைகள் வழங்குநர்கள் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்வது கட்டாயமானதெனவும் உரிய வகையில் பதிவு செய்யாமையினால் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணங்களை சிலருக்கு பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலா தொழில்துறையுடன் தொடர்புப்பட்ட சாரதிகள், சுற்றுலா வழிகாட்டுநர் உள்ளிட்ட சுற்றுலா தொழில்துறை சேவை வழங்குனர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளுக்காக நாட்டில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் சுற்றுலா சேவைகளை வழங்குவோரை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்வது அத்தியாவசியம். அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா சட்டத்தின் 48(3) சரத்துக்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சுற்றுலா சேவைகளை வழங்குவோரை சுற்றுலா சேவை அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பில் சுற்றுலா பயணிகளுக்காக இதுவரையில் பல நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொண்டுள்ளன.

சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும். இதற்கமைய சுற்றுலா சேவைகளை வழங்குவோரை பதிவு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக இணைய முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உரிய வகையில் பதிவு செய்யப்படாததினால் கொவிட் - 19 தொற்று நிலைமையின் காரணமாக அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு சிலரினால் முடியாமல் போயுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுற்றுலா சாரதிகளுக்கு சுற்றுலா சேவை அதிகார சபையினால் முறையிலான பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த பயிற்சியை நாடு முழுவதிலும் உள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களின் ஊடாக வழங்குவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதில் முன்கூட்டியே பயிற்சிகளை பெற்றவர்களுக்கு பயிற்சி மதிப்பு மீளாய்வு வேலைத்திட்டம் ஒன்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51