இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டிசில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின், அபுதாபியில் கைதுசெய்யப்பட்டுள்ளர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி கல்கிஸை பகுதியில் வைத்து ரஞ்சன் சில்வா சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் நடத்ததையடுத்து சந்தேக நபர் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பின்னர் நீதிமன்றினூடாக சந்தேக நபரை கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சர்வதேச பொலிஸான இன்டர்போலின் உதவியுடன் சந்தக நபரான தர்மசிறி பெரேரா என்பவர் நவம்பர் 29 ஆம் திகதி அபுதாபியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரது இந்த கைது நடவடிக்கையை இலங்கையில உள்ள இன்டர்போல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை கைதான சந்தேக நபரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தர்மசிறி பெரேரா செய்த குற்றங்கள் குறித்தும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM