( எம்.எப்.எம்.பஸீர்)
மஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.
இன்று இரவு 8.30 மணியளவில் நான்கு துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் இவ்வாறு கேட்கக் கூடியதாக இருந்தது. எவ்வாறாயினும் அதனால் பாரிய பிரச்சினை எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, களேபரம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றங்களால் பிணையளிக்கப்பட்ட, எனினும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ள 78 கைதிகள் அட்டாளச்சேனையில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உறுதி செய்தார். இதனைவிட கொவிட் 19 தொற்று உறுதியான 187 கைதிகள் கொழும்பு சிறைச்சாலையின் விஷேட வேறுபடுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மஹர சிறைச்சாலையின் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் 200 பேரும் சாதாரண பொலிசார் 400 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த களேபரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொலிஸாரோ அதிரடிப் படையினரோ சிறைச்சாலைக்குள் செல்லவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM