நுவரெலியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று

Published By: Digital Desk 4

30 Nov, 2020 | 08:12 PM
image

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (30.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திம்புள்ள – பத்தனை, லிந்துலை, பூண்டுலோயா, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த அறுவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அறுவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

பூண்டுலோயா, மல்தெனிய பகுதியில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள 44 வயதுடைய நபர் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு புளுமெண்டல் பகுதியிலிருந்து வந்துள்ளார். இவரிடம் கடந்த 28 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

புறக்கோட்டையில் மொத்த வியாபார விற்பனை நிலையமொன்றில் தொழில்புரிந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி திம்புள்ள - பத்தன பொலிஸ் பிரிவிலுள்ள குயின்ஸ்பேரி தோட்டத்துக்கு வந்த 36 வயது நபரொருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவல் தோட்டத்தில் வலகா பிரிவு மற்றும் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூமூட் தோட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் இருவரும் கொழும்பில் இருந்தே வந்துள்ளனர்.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரின்டன் தோட்டத்திலும் இரு இளைஞர்களுக்கு வைரஸ் தொற்று பி.சி.ஆர் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இவர்களில் ஒருவர் கொழும்பு துறைமுகத்தில் வேலை செய்துள்ளார். ஏனையவரும் கொழும்பில் தொழில் புரிந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:35:54
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

கொட்டியாக்கலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீதி பொதுமக்கள்...

2025-03-26 16:38:12
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...

2025-03-26 16:03:57
news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39