மஹர சிறைச்சாலை சம்பவத்தின் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் - ஐ. நா.

Published By: Digital Desk 4

30 Nov, 2020 | 07:51 PM
image

(நா.தனுஜா)

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையில் 'நெல்சன் மண்டேலா சட்டத்தை' அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அமைதியான தீர்வொன்றை எட்டுவதற்கான ஊக்குவிப்பை தாம் வழங்கினோம்': ஐ.நா |  Virakesari.lk

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து 8 பேர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை மற்றும் அதனால் கைதிகள் சிலர் மரணமடைந்துள்ளமை தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து அவதானம் செலுத்தியிருக்கிறோம். உரிய விசாரணைகளின் ஊடாக இச்சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். 

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களையும் சிறைச்சாலை ஊழியர்களையும் பாதுகாப்பதற்கு தந்போதைய நிலைவரம் பற்றி ஆராயப்படுவது அவசியமாகும். இந்நிலையில் 'நெல்சன் மண்டேலா' சட்டத்தை' அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42