மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
பொலிஸ் மற்றும் பிற சட்ட அமுலாக்க அதிகாரிகளின் ஆதரவுடன் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.
அத்துடன் அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 1,099 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக என்றும் இதன்போது அவர் கூறினார்.
வெலிகட சிறைச்சாலையில் 386 பேரும், மஹர சிறைச்சாலையில் 198 பேரும், பழைய போகம்பறை சிறைச்சாலையில் 175 பேரும், கொழும்பு விளக்கமறியில் சிறைச்சாலையில் 157 பேரும், மெகசின் சிறைச்சாலையில் 46 பேரும், குருவிட்ட சிறைச்சாலையில் 32 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM