வளைகுடா நாடுகளுக்கிடையேயான மோதலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்காக வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னரும் அவரது குழுவும் இந்த வாரம் சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், குஷ்னர் சவுதி நகர இளவரசர் முகமது பின் சல்மானை சவூதி நகரமான நியோமில் சந்திக்க உள்ளதாகவும், அதனையடுத்த நாட்களில் கட்டார் எமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை சந்திக்கவுள்ளதாகவும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.
பல பிரச்சினைகளில் சமரசம் செய்து உடன்பாட்டை எட்டுமாறு சவுதி மற்றும் கட்டார் தலைவர்களை வற்புறுத்துவதற்கு குஷ்னர் ஆர்வமாக உள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு ஆக்ஸியோஸ் (Axios) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் இராஜதந்திர உறவுகள் மோசமடைந்த நிலையில் உள்ள நிலையிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இமத் மாத தொடக்கத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ’பிரையன், வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பது தமது நிர்வாகத்தின் முன்னுரிமை என்றும், ஜனவரி மாதம் டிரம்ப் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு அது நிகழ வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM