UPDATE : புதுக்குடியிருப்பில் வெடிமருந்துடன் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு விளக்கமறியல்!

Published By: R. Kalaichelvan

28 Nov, 2020 | 03:37 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட குரவில் பகுதியில் நேற்றிரவு (27) இரண்டு இளைஞர்கள் 200 கிராம் வெடிமருத்துடன்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 மற்றும் 25 வயதுடைய குறித்த இரண்டு சந்தேக நபர்களிடமும் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னர் குறித்த இருவரும் இன்று (28) காலை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றில் பதில் நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில்  பகுதியில் விடுதலைப்பலிகளின் ஆயுத தொழிற்சாலை ஒன்று இயங்கிய இடத்தில் இருந்து குறித்த வெடிமருந்துகளை மீட்டதாகவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பி சென்றுள்ளதாகவும் இரண்டு இளைஞர்கள் 200 கிராம் வெடிமருந்துடன்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் உடையார்கட்டு பகுதியை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் எனவும் இதில் ஒருவர் ஏற்கனவே புதுக்குடியிருப்பு பொலிசாரால் கடந்த வருடம் 52 கிலோகிராம் வெடி மருந்துடன் கைது செய்யப்பட்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்காக : https://www.virakesari.lk/article/95492

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08