மட்டக்களப்பு பிரதேசத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 ஆவது பிறந்ததினத்தையிட்டு நேற்று வியாழக்கிழமை (26) அவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றி பிறந்ததின வாழ்த்து தெரிவித்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேரை நேற்று இரவு கைதுசெய்து 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து முகநூலில் வெளிவந்தது தொடர்பாக புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் முகநூலில் தரவேற்றம் செய்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் பிரகாரம் செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேரை முதலில் அடையாளம் கண்டு அவர்களை நேற்று இரவு கைது செய்தனர்.
இதில் இரண்டு நகைக்கடைகளில் வேலை செய்பவர்கள். புதிதாக பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற ஒருவர் உட்பட 4 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதில் கைது செய்தவர்களின் பெயரிலுள்ள முகநூலில் குறித்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த 90 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM