பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் 4 பேர் கைது  

Published By: Digital Desk 4

27 Nov, 2020 | 02:26 PM
image

மட்டக்களப்பு பிரதேசத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 ஆவது பிறந்ததினத்தையிட்டு நேற்று வியாழக்கிழமை (26)  அவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றி பிறந்ததின வாழ்த்து தெரிவித்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட  4 பேரை நேற்று இரவு கைதுசெய்து 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து முகநூலில் வெளிவந்தது தொடர்பாக  புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் முகநூலில் தரவேற்றம் செய்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் பிரகாரம் செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேரை முதலில் அடையாளம் கண்டு அவர்களை நேற்று இரவு கைது செய்தனர்.

இதில் இரண்டு நகைக்கடைகளில் வேலை செய்பவர்கள். புதிதாக பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற ஒருவர் உட்பட 4 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்தவர்களின் பெயரிலுள்ள முகநூலில் குறித்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த 90 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53