(க.பிரசன்னா)
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு நீர் கட்டணங்களை செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் தற்போது நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொண்டு நீர் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாதெனவும் இருப்பினும், நீர் பாவனையாளர்கள் தங்களது மாதாந்த நீர் கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்த வேண்டுமெனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் திலின எஸ். விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை நீர் கட்டணங்களை செலுத்துவதற்காக முன்று வகையான செயலிகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே நீர் கட்டணத்தை செலுத்த முடியும்.
SMART Pay, SelfCare, SMARTZone Web Portal ஆகிய மூன்று முறைகளைப் பின்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது நீர் கட்டணத்தை செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM