(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கடந்த 5வருடங்களில் 500 ஊடகவியலாளர்களுக்கு தொழில் இல்லாமல்போயுள்ளதுடன் அவர்களில் அதிகமானவர்களுக்கு ஒருசத மேனும் நஷ்டயீடும் கிடைக்கப்பெறவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஊடகத்துறை,வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் பிராந்திய உறவுகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். அவர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிகாரிக்கப்படும்போது அவர்கள் இறுதிக்கட்டமாக வீதிக்கிறங்கி போராட ஆரம்பிப்பார்கள். அதன் அடிப்படையிலே கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு போதுமான எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இறுதியாக வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்களின் போராட்டத்தின் மூலம் அவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு எடுத்துச்சொல்லும் பொறுப்பு ஊடகங்களுக்கே இருக்கின்றன. என்றாலும் அந்த மக்களின் போராட்டத்தை ஒரு சில ஊடகங்களே வெளிப்படுத்தியிருந்தன. இது கவலைக்குரிய விடயமாகும்.
அதேபோன்று கொவிட் தொற்றுக்கு ஆளாகிய நபர் ஒருவரை சுகாதார பிரிவினர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது, பாரிய குற்றவாளியை எடுத்துச்செல்வது போன்றே சில ஊடகங்கள் அதனை வெளிப்படுத்துகின்றன. இது அவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லாமையே காரணமாகும். அதனால் ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.
மேலும் கொவிட் காரணமாக ஊடகவியலாளர்கள் பல பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகத்துறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் சுயாதீன ஊடகவியலாளர்களாகும். அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.
கடந்த 5வருடத்தில் 500 ஊடகவியலாளர்கள் தங்களின் தொழிலை இழந்துள்ளதாக இணையத்தளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களில் அதிகமானவர்களுக்கு ஒரு சதமேனும் நஷ்ட ஈடு கிடைத்ததாக இ்ல்லை.
அதனால் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை கருத்திற்கொண்டு அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று அவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM