5 வருடங்களில் 500 ஊடகவியலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர் - எதிர்க்கட்சி

25 Nov, 2020 | 09:49 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கடந்த 5வருடங்களில் 500 ஊடகவியலாளர்களுக்கு தொழில் இல்லாமல்போயுள்ளதுடன் அவர்களில் அதிகமானவர்களுக்கு ஒருசத மேனும் நஷ்டயீடும் கிடைக்கப்பெறவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில்  ஊடகத்துறை,வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் பிராந்திய உறவுகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். அவர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிகாரிக்கப்படும்போது அவர்கள் இறுதிக்கட்டமாக வீதிக்கிறங்கி போராட ஆரம்பிப்பார்கள். அதன் அடிப்படையிலே கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு போதுமான எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இறுதியாக வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்தனர். 

ஆனால் அவர்களின் போராட்டத்தின் மூலம் அவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு எடுத்துச்சொல்லும் பொறுப்பு ஊடகங்களுக்கே இருக்கின்றன. என்றாலும் அந்த மக்களின் போராட்டத்தை ஒரு சில ஊடகங்களே வெளிப்படுத்தியிருந்தன. இது கவலைக்குரிய விடயமாகும்.

அதேபோன்று கொவிட் தொற்றுக்கு ஆளாகிய நபர் ஒருவரை சுகாதார பிரிவினர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது, பாரிய குற்றவாளியை எடுத்துச்செல்வது போன்றே சில ஊடகங்கள் அதனை வெளிப்படுத்துகின்றன. இது அவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லாமையே காரணமாகும். அதனால் ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.

மேலும் கொவிட் காரணமாக ஊடகவியலாளர்கள் பல பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகத்துறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் சுயாதீன ஊடகவியலாளர்களாகும். அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். 

கடந்த 5வருடத்தில் 500 ஊடகவியலாளர்கள் தங்களின் தொழிலை இழந்துள்ளதாக இணையத்தளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களில் அதிகமானவர்களுக்கு ஒரு சதமேனும் நஷ்ட ஈடு கிடைத்ததாக இ்ல்லை.

அதனால் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை கருத்திற்கொண்டு அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று அவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08