பயங்கரவாதிகளின் தினங்களை கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் - பொலிஸ்

25 Nov, 2020 | 09:48 PM
image

(செ.தேன்மொழி)

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலை புலிகள் இயத்தின் போராளிகள் நினைவுதினத்தை அனுஷ்டிக்கும் நோக்கத்தில் அதற்கான அனுமதியை வழங்குமாறு அப் பகுதியில் சிலர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கு எதிராக பொலிஸார் தடைஉத்தரவு விதித்த போது, அந்த உத்தரவை நீக்குமாறு குறிப்பிட்டு யாழ் மேல் நீதிமன்றத்தில் சிலர் மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ததுடன், அந்த மனுக்களை பரிசீலனை செய்யாமலே நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி ஏற்கனவே மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு தடைவிதித்திருந்த்துடன்,எதிர் வரும் 29 ஆம் திகதி வரையிலும் இந்த நினைவு தினத்தை கொண்டாடக் கூடாது என்று அந்த தடை உத்தரவை நீடித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன்  1999 ஆம் ஆண்டிலேயே இந்த இரு தினங்களையும் மாவீரர் தினமாக பெயரிட்டிருந்தார்.

அந்த தினத்தையே இவர்கள் இவ்வாறு கொண்டாட முயற்சித்து வருகின்றனர். பயங்கரவாதிகளின் தினங்களை கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்செயற்பாடாகும்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது ,  சட்டமா அதிபரின் சார்பில் சிரேஷ்ட சொலிஸ்டர் ஜெனரால் அரிப்பிரியா ஜயசுந்தரம்,பிரதி சொலிஸ்டர் ஜெனரால் குமார்ரத்னம், சிரேஷ்ட சட்டதரணி ஜனக்கபண்டார மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும்,சட்டநரணியுமான ருவன் குணசேகர ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். 

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக எவரேனும் செயற்பட்டால் அவர்களை கைது செய்து,அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையும் எடுக்கமுடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08