பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு ஆங்கிலம், தொழிநுட்ப பாடத்தை கற்பிக்க நடவடிக்கை

Published By: Digital Desk 3

25 Nov, 2020 | 09:46 AM
image

(எம்.மனோசித்ரா)

பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களுக்கு டிசம்பரில் இணையவழியூடாக ஆங்கிலம் மற்றும் தொழிநுட்ப பாடத்தை கற்பிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணையவழியூடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

பல்கலைக்கழகங்களுக்கு இணைய வழியூடாக புதிதாக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இணையவழியூடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெற்றிகரமாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பரீட்சைகளையும் நடத்தக்கூடியதாகவிருந்தது.

இதேவேளை தற்போது பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளும் இணைய வழியூடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி 41,500 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

சுதந்திரத்துக்குப் பின்னர் அதிகளவான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34