(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்துவரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கையாலே மக்கள் குழப்பமடைந்திருக்கின்றனர். நாங்கள் மக்களை குழப்பியதாக தெரிவிக்கப்படும் செய்தியை முற்றாக நிராகரிக்கின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 27/ 2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொவிட் தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் அதற்காக அரசாங்கம் எடுத்துவரும் தீர்வுகள் தொடர்பாகவும் பல கேள்விளை முன்வைத்தார். குறித்த கேள்விகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு பதிலளிப்பதாக ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துவிட்டு, எதிர்க்கட்சி தலைவர் மக்கள் குழப்பக்கூடாது என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட் தனிமைப்படுத்தல் சட்டத்தினால் மேல்மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் பாரியளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைச்செலவுக்காக அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபா ஒருமாதத்துக்கு போதுமானதல்ல. அரசாங்கத்தின் நடவடிக்கையால்தான் மக்கள் கொவிட்டையும் கண்டுகொள்ளாமல் குழப்படைந்து வீதிக்கிறங்க முற்படுகின்றனர்.
ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பதுபோல் மக்களை குழப்ப எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. மக்கள் எதிர்நோக்கியுள்ள கஷ்டத்தில் அரசியல் செய்யும் தேவை எமக்கில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5ஆயிரம் ரூபாவை 30 நாட்களுக்கு பிரித்து செலவழிக்கவேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே தெரிவித்திருக்கின்றார்.
அரச தரப்பின் இவ்வாறான பேச்சுக்களினால்தான் மக்கள் ஆத்திரமடைந்து குழப்படைகின்றனர். அதனால் அரசாங்கம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தொடர்பில் மனிதாபிமானத்துடன் செயற்படவேண்டும் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM