சஹ்ரான் போன்றோரை தண்டிப்பதற்கு மட்டுமல்ல அவர்களை உருவாக்குவோரை அழிக்கவே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார் - விமல் 

Published By: Digital Desk 4

24 Nov, 2020 | 06:01 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சஹரான் போன்றவர்களை தண்டிப்பது மட்டுமல்ல அவர்களை உருவாக்கும் அராபிய பாடசாலைகள், மதரஸாக்களையும் முழுமையாக அழிக்கவே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் உடனடியாக இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் செயற்படும் நிறுவனங்ளுக்காக நிதி ஒதுக்கீட்டு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சகல விதத்திலும் பலவீனமடைந்தது, ஆனால் இன்று அவ்வாறு எந்தவொரு பலவீன செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எமக்கு நல்லதொரு முன்னுதாரணமாக உள்ளார். 

ஜனாதிபதி - பிரதமரின் தலைமைத்துவம் நாட்டின் யுத்தத்தை வெற்றிகொண்டதை போலவே இன்று நாட்டின் சவால்களை வெற்றிகொள்ளவும் எதுவாக அமைந்துள்ளது. 

இந்த நாட்டில் இன்று சட்டம் எவரகுஉம் தனிப்பட்ட தேவைக்காக வளைந்துகொடுக்காது சட்டம் நிலைநாட்டப்பட்டு வருகின்றது. விடுதலைப்புலிகளின் நினைவேந்தலை கோரி சுமந்திரன் வழக்கொன்றில் ஆஜரானார். ஆனால் அவர்களின் சட்ட தர்க்கங்கள் எல்லாமே நிராகரிக்கப்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட்டுள்ளது. 

இதுவே கடந்த காலமாக இருந்திருந்தால் விடுதலைப்புலிகளுக்கு சட்டம் வளைந்திருக்கும். ஈஸ்டர் தாக்குதல் இந்த நாட்டில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கியது என்பதை அனைவரும் தெரிந்திருப்பார்கள், தேசிய பாதுகாப்பின் வெற்றிடம் என்ன என்பதையும் அதனை நிறைக்க கோத்தபாய ராஜபக்ஷவை மக்கள் தெரிவு செய்யவும் காரணமாக அமைந்தது.

ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டுவந்த மக்கள், ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை எப்போது தண்டிப்பார்கள் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர், அதேபோல் சஹரான்  போன்றவர்களை  உருவாக்க காரணமானவர்களையும், அராபிய பாடசாலைகள், மதரஸா பாடசாலைகள் என்ற பெயரில் சஹரான் போன்றவர்களை உருவாக்க காரணமான நபர்களை தண்டிக்க வேண்டும். பெளத்த, கிறிஸ்தவ அறநெறி பாடசாலைகளில் ஏனைய மதத்தவரை கொலைசெய்ய வேண்டும் என கற்பிப்பதில்லை,

 இந்து அறநெறி பாடசாலைகளில் இவ்வாறு ஏனைய மதத்தவரை கொலைசெய், கழுத்தை வெட்டு என கற்பிப்பதில்லை. விடுதலைப்புலிகள் பயங்கரவாதம் இருந்தபோதும் அதற்கும் இந்து ஆலயங்களுக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. ஆனால் இந்த விடயத்தில் அவ்வாறு அல்ல, மத நடவடிக்கைகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். 

அராபி பாடசாலை என்ற பெயரில், மதரஸா என்ற பெயரில் எதனை கற்பிக்கின்றனர் என எவருக்கும் தெரிவதில்லை. எனவே சஹரான் போன்றவர்களை தண்டிப்பது மட்டுமல்ல அவர்களை உருவாக்கும் இவ்வாறான மத செயற்பாடுகளையும் முழுமையாக அழிக்கவே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். 

இப்போது ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, அவர்களின் அறிக்கை வெளிவந்தவுடன் உடனடியாக இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் சிங்கள இந்து, கிறிஸ்தவ மக்கள் நிம்மதியாக மத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சூழலை உருவாக்கிக்கொடுப்பதே எமது நோக்கமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41