கொவிட்-19 பரவல் காரணமாக இரு மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 188 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின், அபுதாபியிலிருந்து 50 இலங்கையர்கள் எட்டிஹாட் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான EY-264 என்ற விமானத்தில் அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அத்துடன் கட்டார், தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 48 இலங்கையர்கள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதேபோன்று தோஹாவிவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -218 என்ற விமானத்தில் 90 இலங்கையர்கள் அதிகாலை 5.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களால் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM