(செ.தேன்மொழி)
தணமல்வில பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தணமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவ குடாவோயா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலின் போதே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதுடன், அதில் ஒருவருக்கு பொல்லால் தாக்கியுள்ளனர்.
இந்த மோதல் தொடர்பில் 119 என்ற அவசர அழைப்பு பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், பின்னர் தணமல்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது படுகாயமடைந்திருந்த நபரை, பொலிஸ் நடமாடும் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவரை அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பும் போது அவர் உயிரிழந்துள்ளார்.
தணமல்வில பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,அவர்களை கைது செய்வதற்காக தணமல்வில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM