(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை கொண்டு அரசியல்வாதிகள் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவரை புதைப்பதா ? தகனம் செய்வதா என்ற விடயத்தில் நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிடும் கருத்துக்கள் ஒருதலைபட்சமானது.
இவர் நீதியமைச்சர் மாத்திரமே தவிர நாட்டு தலைவர் அல்ல, நெருக்கடியான சூழ்நிலையில் சிங்கள பௌத்த மக்கள் மத உரிமைகள் பலவற்றை விட்டுக் கொடுத்துள்ளார்கள். முஸ்லிம் சமூகத்தினர் நெருக்கடியான நிலையில் தங்களின் மத உரிமைகளை கோருவது முரண்பாடானது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்துக் கொள்கிறார்கள். சுகாதார தரப்பினர் விரைவாக முரண்பாடற்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM