கொவிட்-19 பரவலால் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்ப முடியாது சிக்கித் தவித்த மேலும் 167 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 68 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் நேற்றிரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதேபோன்று கட்டாரின், தோஹாவிலிருந்து 42 இலங்கையர்கள் கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர்-668 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அத்துடன் மேலும் 57 இலங்கையர்கள் துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -226 என்ற விமானத்தில் அதிகாலை 3.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் கொழும்பு நவலோக, லங்கா மற்றும் ஆசிரி தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களால் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM