லசந்த கொலை வழக்கில் முக்கிய திருப்பம்

Published By: Ponmalar

27 Jul, 2016 | 05:48 PM
image

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியை லசந்த விக்ரமதுங்கவின் சாரதியால் அடையாளம் காட்ட முடிந்ததாக லசந்தவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அதுல எஸ்.ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பாக இன்று (27) இடம்பெற்ற அடையாள அணி வகுப்பின் போது , கொலைச் சம்பவத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டியதாக கூறப்படும் குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரியை சாரதியால் அடையாளம் காட்ட  முடிந்ததாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அடையாள அணிவகுப்பு கல்கிசை மேலதிக நீதவான் லோசனா வீரசிங்க முன்னிலையில் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த கொலையை நேரில் கண்ட சாட்சியங்களை எதிர்வரும் 3 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி கல்கிசை நீதவான் மொஹமட் சகாப்தின் இன்று உத்தரவிட்டுள்ளார் எனவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21