இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த நிலையில், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளுடன் பாம்பன் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
கடந்த 2016ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 19 நாட்டு படகுகளை மீட்க மத்திய அரசு தவறியமையை கண்டித்தும் படகுகளுக்கு தீர்வினை கோரியும் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த நான்கு வருடங்களாக இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தீர்வு எட்டப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் படகுகளை இழந்த மீனவ குடும்பங்கள் மற்றும் மீன்பிடி தொழில் சங்கத்தினர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 19 நாட்டுப் படகுகள் இன்றைய தினம் வரைக்கும் விடுவிக்கப் படவில்லை.
இந்நிலையில் மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு பாம்பன் (2) மற்றும் நம்புதாளை(3) பகுதியைச் சேர்ந்த ஐந்து படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் அதை மீட்க இந்திய அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளனர்.
நான்கு வருடங்களாக இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகள் இனி மீட்கப்பட்டாலும் அதனை மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்த முடியாது.
எனவே, ஒவ்வொரு படகையும் நம்பி சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கை வசமுள்ள 19 படங்களுக்கு தலா ரூ, 30 லட்சம் ரூபாய் நிவாரணமாக மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் இல்லையெனில் சென்னை கோட்டையில் பாதிக்கப்பட்ட மீனவக்குடும்பங்களையும், தமிழ்நாடு நாட்டுப்படகு மீன்பிடி கடல் தொழிற்சங்க அமைப்புகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பியதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM