(நா.தனுஜா)
உள்நாட்டு உற்பத்தி என்ற போர்வையில் அரச மருந்தக உற்பத்திக் கூட்டுத்தாபனத்தில் பெருமளவான ஊழல் இடம்பெற்றுவருகின்றது. கடந்த காலத்தில் அரச மருந்தக உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியவர் பெருமளவான ஊழல்களில் ஈடுபட்டிருந்தார்.
எனினும் தற்போது தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் முன்னாள் தலைவரின் நெருங்கிய உறவினராவார். இவர்கள் இருவரும் இணைந்து மருந்தக உற்பத்திகளின் ஊடாக குறித்தளவில் சட்டவிரோத வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றனர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவர் ருக்ஷான் பெல்லன குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி எதிர்வரும் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியினளவு குறைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியிருக்கிறார்.
அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்கென அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத்திட்டத்தில் சுகாதாரத்துறைக்கென ஒப்பீட்டளவில் குறைந்தளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை பெரிதும் விசனமளிக்கிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும், அதற்கு முன்னைய வருடத்தை விடவும் அதிகளவான நிதியே சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும். அவ்வாறிருக்கையில் இம்முறை சுகாதாரத்துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளமை முக்கியமாக அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
அரசசெலவினங்களைக் குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதுதொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருந்துப்பொருட்களின் அளவு குறைக்கப்படவிருக்கிறதா? அல்லது மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்படும் நிதியினளவு குறைக்கப்படவிருக்கிறதா? அல்லது சுகாதாரத்துறையில் இடம்பெறும் ஊழல்களைக் கட்டுப்படுத்தி, அதன்மூலம் செலவுகள் குறைக்கப்படவிருக்கிறதா? என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் அவர் இதன்போது தெரிவத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM