கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 2 ஆவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம்பம்

19 Nov, 2020 | 08:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள்  ஆரம்பம் – Jaffna Journal

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுபீட்சத்தின்  எதிர்கால நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் விமான நிலைய விமான போக்குவரத்து (ஸ்ரீலங்கா) தனியார் நிறுவனம் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்த பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ , மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவின் பங்கேற்புடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

விமான நிலையத்தின் 2 ஆம் கட்ட பணிகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்து செல்வதை பல்வேறு காரணங்களை முன்வைத்து தாமதப்படுத்தியது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள்  ஆரம்பம்

அதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் தடைப்பட்டது. எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இதன் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை துரிதப்படுத்துவதாக சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டதை உறுதிபடுத்தும் வகையிலாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டும்,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஓராண்டு  கால பதவி பூர்த்தியை முன்னிட்டும் இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், விமான நிலையத்தை பயன்படுத்தும் ஏனைய பயணிகளை ஊக்குவிப்பிற்கும் தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் சர்வதேச விமான சேவை தொடர்புகளின் போது நட்பான சூழலை ஏற்படுத்தி ஒரு நிலையான பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42