முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பிரதான வீதியை அண்டிய இரட்டை வாய்க்கால் பகுதியில் இருக்கின்ற நந்திக்கடல் களப்பில் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக மீன் பிடித்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் குறிப்பாக குறிப்பிட்ட சில காலங்களுக்கு முன்னர் குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் இயற்கை ஒத்துக்கிடமாகவும் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.
குறித்த களப்பு பகுதியில் வீதியின் ஓரத்தில் கொட்டப்படுகின்ற குப்பைகளால் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வீச்சுவலை தொழிலைச் செய்கின்ற மீனவர்களின் வலையில் குப்பைகள் படுவதால் அவர்களது நேரங்கள் வீணடிக்கப்படுவதாகவும் குறித்த சூழல் மிகவும் பாதிப்பதாகவும் பல்வேறு பறவைகளின் வருகை காணப்படுகின்ற குறித்த பிரதேசங்களில் இவ்வாறான அசாதாரண சூழல் குப்பைகளை போட்டு ஏற்படுத்துவதன் விளைவாக இவ்வாறான பறவைகள் எதிர்காலத்தில் அழிந்து செல்வதற்கும் இயற்கை சமநிலை பாதிக்கப்படுவதற்கும் இது ஒரு காரணமாக அமையக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த களப்பை நம்பி மீன்பிடி தொழிலை நம்பி வாழ்வை கொண்டு செல்கின்ற மீனவர்களுக்கும் இதனுடாக பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடை செய்து குறித்த களப்பு பகுதியில் இருக்கின்ற குப்பைகளை அகற்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு குறித்த இயற்கை ஒத்துக்கிடத்துக்கு வருடத்திற்கு வருகின்ற பறவைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM