கொட்டப்படும் குப்பைகளால் பறவைகள், மீனவர்கள் பாதிப்பு

Published By: Digital Desk 4

19 Nov, 2020 | 05:59 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பிரதான  வீதியை  அண்டிய இரட்டை வாய்க்கால் பகுதியில் இருக்கின்ற நந்திக்கடல் களப்பில் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக  மீன் பிடித்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் குறிப்பாக குறிப்பிட்ட சில காலங்களுக்கு முன்னர் குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் இயற்கை ஒத்துக்கிடமாகவும் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

குறித்த களப்பு பகுதியில்   வீதியின் ஓரத்தில் கொட்டப்படுகின்ற குப்பைகளால் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வீச்சுவலை தொழிலைச் செய்கின்ற மீனவர்களின் வலையில் குப்பைகள்  படுவதால் அவர்களது நேரங்கள் வீணடிக்கப்படுவதாகவும் குறித்த சூழல் மிகவும் பாதிப்பதாகவும்  பல்வேறு பறவைகளின் வருகை காணப்படுகின்ற குறித்த பிரதேசங்களில் இவ்வாறான அசாதாரண சூழல் குப்பைகளை போட்டு ஏற்படுத்துவதன் விளைவாக இவ்வாறான பறவைகள் எதிர்காலத்தில் அழிந்து செல்வதற்கும் இயற்கை சமநிலை பாதிக்கப்படுவதற்கும் இது ஒரு காரணமாக அமையக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த களப்பை நம்பி மீன்பிடி தொழிலை நம்பி வாழ்வை கொண்டு செல்கின்ற மீனவர்களுக்கும் இதனுடாக பல்வேறு ஆபத்துக்கள்  ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடை செய்து குறித்த களப்பு பகுதியில் இருக்கின்ற குப்பைகளை அகற்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு குறித்த இயற்கை ஒத்துக்கிடத்துக்கு வருடத்திற்கு வருகின்ற பறவைகளை பாதுகாப்பதற்கும்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50