வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தொடரும் ஊரடங்கு - பொதுமக்களை கட்டுப்படுத்த படையினர் தீவிரம்

Published By: Digital Desk 4

18 Nov, 2020 | 05:27 PM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதன்முதலாக பதினொறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 25 ஆம் திகதி காலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று 18 ஆம் திகதி புதன்கிழமை வரை 25 நாட்களாக தொடர்ந்து செல்கிறது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைந்து காணப்படுகின்றனர்.

குறித்த பொலிஸ் பிரிவில் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இதுவரை 59 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் பலருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள சுகாதாரப் பிரிவினர்கள் காத்திருக்கின்றனர்.

குறித்த பொலிஸ் பிரிவில் பிறப்பிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு காரணமாக வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தோடு வீதிகளுக்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் வீடுகளுக்கு அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 13:05:56
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19