பெருவியன் சட்டமன்ற உறுப்பினர் பிரான்சிஸ்கோ சாகஸ்தி செவ்வாய்க்கிழமை இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

பெருவின் இடைக்கால ஜனாதிபதியாக மானுவல் மெரினோ நியமிக்கப்பட்டதையடுத்து அங்கு முன்னெடுக்கப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவர் பதவி விலகினார்.
இந் நிலையிலேயே சாகஸ்தி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 ஏப்ரல் 11 ஆம் திகதி பெருவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் centrist Purple Party யின் சட்டமன்ற உறுப்பினரான சாகஸ்தி, அடுத்த ஆண்டு ஜூலை வரை தனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருவின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கரா மீது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தவறாக நிர்வகித்தமை, அரசாங்க ஒப்பந்தங்களை பெற்ற நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமையினால் அவர் நவம்பர் 10 ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார்.
அதன் பின்னரே மானுவல் மெரினோ இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
எனினும் அவரது நியமனம் மற்றும் மார்ட்டின் விஸ்கரா பதவி விலகியமையை கண்டித்து பெருவில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக மெரினோ பதவியேற்று ஆறு நாட்களின் பின்னர் பதவியிலிருந்து விலகினார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM