மன்னாரில் 30 குளங்கள் புனரமைப்பு - மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் 

Published By: Digital Desk 4

18 Nov, 2020 | 10:52 AM
image

கடந்த 2019 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள்  புனரமைப்பு திட்டத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக  36 குளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதில் 30 குளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 

மிகுதி 6 குளங்களின் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தெரிவித்தார்.

குளங்களின் புனரமைப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் வரிகள் போக 233 மில்லியன் ரூபாய் நிதியே  அனுமதிக்கப்பட்டது.   இறுதியில் 80 மில்லியன் நிதியே எமக்கு கிடைத்தது.

அதில்  விவசாயிகளின் வேலை இடைநிறுத்தப்படக் கூடாது என்பதற்காக 130 மில்லியன் ரூபாவுக்கான வேலை செய்து முடிக்கப்பட்டுள்ளது.  இதன் படி ஒப்பந்த காரர்களுக்கு  50 மில்லியன் ரூபா கடனாக கொடுக்க வேண்டியுள்ளது.

இவர்களுக்கான கொடுப்பனவுகள் கொடுத்து முடிக்கப்பட்டதும் விடுபட்டிருந்த 6 குளங்களுடன் புதிதாக 7 குளங்களும் உள்வாங்கப்படவுள்ளது.

மொத்தம் 13 குளங்கள் மன்னார் மாவட்டத்தில் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.   இவை அடுத்த வருடம் ஜனவரிக்கு பின்னரே ஆரம்பிக்கப்படும் என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

லொறியால் மோதிய வயோதிபரை வைத்தியசாலைக்கு கொண்டு...

2023-12-11 18:28:47
news-image

மதுபான சாலைகளை காட்டி சுற்றுலா பயணிகளை...

2023-12-11 18:32:29
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40