அமெரிக்காவிலிருந்து மூவரும், ஜப்பானிலிருந்து ஒருவருமாக நாசாவை சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்களுடன் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று அதிகாலை 12.27 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் க்ரூ-1 கப்ஸியூல் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
2003 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பியா ரொக்கெட் வெடித்த காரணத்தால் நாசா தனியார் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.
அந்த வகையில் நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ரொக்கெட் சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக கடந்த மே மாதம் விண்ணில் ஏவப்பட்டது.
இதன் மூலம் விண்ணுக்கு மனிதர்களை பத்திரமாக அனுப்பி திரும்பி கொண்டு வர முடியும் என்ற சோதனை ஓட்டத்தில் வெற்றி காணப்பட்டது.
இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் தயாரித்துள்ள ‘ட்ராகன் க்ரூ-1 கப்ஸியூல்‘ (DragonCrew-1 capsule) விண்கலம் மூலம் அதிகாலை நாசாவின் 4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றது.
இதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மைக் பென்ஸ் மற்றும் கரேன் பென்ஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹோப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்களும் சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம் செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM