( மயூரன் )
கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிவான் 50 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறையை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் , கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் நின்று கைத்தொலைபேசியில் ஆபாசப்பட காணொளிகளை பார்வையிட்ட வண்ணம் இருந்துள்ளார்.
அவ்வேளை குறித்த வீதியின் ஊடக ரோந்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் அதனை அவதானித்தவுடன் குறித்த நபரிடம் இருந்து கைத்தொலைபேசியை கைப்பற்றியதுடன் , குறித்த நபரையும் கைது செய்தனர்.
கைது செய்த நபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் முற்படுத்திய போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு , 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிவான் 50 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM