புத்தளம், தளுவை கடற்பிரதேசத்தில் சட்டவிரதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 2000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பொதிகள் செய்யப்பட்ட 2000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த மஞ்சள் மூடைகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்துவதற்கு தயாராக இருந்த லொறியொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM