சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாயார் பலி

Published By: Vishnu

13 Nov, 2020 | 09:03 AM
image

அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்ட விரோத மின் இணைப்பில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாயாரொருவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சபம்வத்தில் உயிழந்தவர் காளி கிட்னம்மாள் (65 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் பூஜைக்காக வாழையிலை வெட்டுவதற்காக மேற்படி தோட்டத்திற்கு சென்றுள்ளார் நீண்ட நேரம் அவர் வருகை தராமையினால் வீட்டில் உள்ளவர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், மிருகங்களுக்காக பொருத்தப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்குண்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் சடலம் நுவரெலியா நீதவானின் மேற்பார்வையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29
news-image

தம்மென்னாவ வனப்பகுதியில் 8,516 கஞ்சா செடிகள்...

2025-02-17 12:55:58