43 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுபொருள் நிவாரணம்

11 Nov, 2020 | 10:20 PM
image

(நா.தனுஜா)

திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உணவுப்பொதிகளை வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் 43,376 குடும்பங்களுக்கு அவ்வுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமது வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்கும் செயற்திட்டத்தின் ஊடாக 1409578 குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன.

இக்காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளினால் நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக 7.56 பில்லியன் ரூபா நீதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனூடாக கொழும்பு மாவட்டத்தில் 7500 குடும்பங்களும் கம்பஹா மாவட்டத்தில் 7000 குடும்பங்களும் களுத்துறை மாவட்டத்தில் 4000 குடும்பங்களும் நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

அதேபோன்று வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதற்காக 7.04 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதுடன், அதனூடாக கம்பஹா மாவட்டத்தில் 544,254 குடும்பங்களும் கொழும்பு மாவட்டத்தில் 466,720 குடும்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் 262,000 குடும்பங்களும் பயன்பெற்றிருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46