43 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுபொருள் நிவாரணம்

11 Nov, 2020 | 10:20 PM
image

(நா.தனுஜா)

திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உணவுப்பொதிகளை வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் 43,376 குடும்பங்களுக்கு அவ்வுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமது வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்கும் செயற்திட்டத்தின் ஊடாக 1409578 குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன.

இக்காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளினால் நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக 7.56 பில்லியன் ரூபா நீதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனூடாக கொழும்பு மாவட்டத்தில் 7500 குடும்பங்களும் கம்பஹா மாவட்டத்தில் 7000 குடும்பங்களும் களுத்துறை மாவட்டத்தில் 4000 குடும்பங்களும் நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

அதேபோன்று வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்குவதற்காக 7.04 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதுடன், அதனூடாக கம்பஹா மாவட்டத்தில் 544,254 குடும்பங்களும் கொழும்பு மாவட்டத்தில் 466,720 குடும்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் 262,000 குடும்பங்களும் பயன்பெற்றிருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31