அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

Published By: Digital Desk 4

09 Nov, 2020 | 06:27 PM
image

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டார்.

இன்றையதினம் (09) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்தது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக அநுர பிரியதர்ஷன யாப்பாவின் பெயரை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன முன்மொழிந்ததுடன், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அதனை வழிமொழிந்தார். 

தலைவர் நியமனத்தைத் தொடர்ந்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் எதிர்கால செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், 2020 நிதியாண்டின் நிதிஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07