அரசாங்கம் இன்று தொடக்கம் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியுள்ளது. இருந்தபோதிலும் 5 மாவட்டங்களில் 26 பொலிஸ் பிரிவுகளில் மற்றும் ஒரு கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பில் 12 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹாவில் 8 பொலிஸ் பிரிவுகளும், களுத்துறையில் இரு பொலிஸ் பிரிவுகளும் ஒரு கிராம சேவகர் பிரிவும், குருணாகலில் இரு பொலிஸ் பிரிவுகளும், கேகாலையில் இரு பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படும்.
கொழும்பில் பொலிஸ் பிரிவுகளான மட்டக்குளி, முகத்துவாரம், புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், வெரலபட, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.
கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுணுகம, ஜாஎல, சபுகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.
களுத்துறை மாவட்டத்தில் ஹொரன மற்றும் இங்கிரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளும், வேகட பட்டஹிர கிராம சேவகர் பிரிவு என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும்.
குருணாகல் மாவட்டத்தில் குருணாகல் நகர எல்லை மற்றும் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு என்பவை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.
இதேவேளை, கொவிட்-19 தொற்று பரவல் தொடர்பில் கடும் அனர்த்தத்துடனான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 வீடமைப்பு திட்டங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வீடமைப்பு திட்டங்களில் வாழும் மக்கள் வீடுகளுக்கிடையில் நடமாடுவதை தவிர்த்து பயணங்களை வரையறுத்து தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மெத்சந்த செவன, மிஹிஜய செவன, மோதர ரன்மின செவன, சிரிசந்த உயன தெமட்டகொட மற்றும் மாளிகாவத்தை என்.எச்.எஸ். வீடமைப்பு திட்டம் என்பனவே அவையாகும்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அதாவது;
●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ எந்த நபர்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
●வேலைகள் / வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியேற எந்த நபர்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ஊரடங்கு உத்தரவு இல்லாத பகுதிகளுக்கு வேலைவாய்ப்பும் தடைசெய்யப்பட்டுள்ளது.
●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை
●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வேறொரு பகுதிக்கு வெளியேற எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
●தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்க வேண்டும்.
எனவே மக்கள், நிலைமையை உணர்ந்து அமைதியாக தத்தமது வீடுகளில் இருப்பதை தவிர, வேறு மார்க்கம் இல்லை என்றே கூறவேண்டும்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM