தொடர்ந்தும் தனிமைப்படுத்தலிலுள்ள பிரதேசங்களின் விபரம் இதோ..!

Published By: J.G.Stephan

08 Nov, 2020 | 01:52 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு  சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள  அனைத்து பிரதேசங்களிலும் நாளை திங்கட்கிழமை(09.11.2020) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று ஞாயிற்றுக்கிழமை(08.11.2020) அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் 12 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹாவில் 8 பொலிஸ் பிரிவுகளும், களுத்துறையில் இரு பொலிஸ் பிரிவுகளும் ஒரு கிராம சேவகர் பிரிவும் , குருணாகலில் இரு பொலிஸ் பிரிவுகளும், கேகாலையில் இரு பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படும்.


கொழும்பு
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளான மட்டக்குளி, முகத்துவாரம், புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், கரையோர பொலிஸ் பிரிவு, ஆட்டுப்பட்டித் தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

கம்பஹா
கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகமை, நீர்கொழும்பு, பமுணுவ, ஜாஎல, சபுகஸ்கந்த ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

களுத்துறை
களுத்துறை மாவட்டத்தில் ஹொரன மற்றும் இங்கிரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளும் , வேகட கிராம சேவகர் பிரிவு என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும்.

குருணாகல்
குருணாகல் மாவட்டத்தில் குருணாகல் நகர எல்லை மற்றும் குளியாபிட்டி பொலிஸ் பிரிவு என்பவை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.

கேகாலை
கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை பொலிஸ் பிரிவு மற்றும் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே இருக்கும்.

இதே வேளை கொவிட்-19 தொற்று பரவல் தொடர்பில் கடும் அனர்த்தத்துடனான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 வீடமைப்பு திட்டங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடமைப்பு திட்டங்களில் வாழும் மக்கள் வீடுகளுக்கிடையில் நடமாடுவது தவிர்த்து பயணங்களை வரையறுத்து தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மெத்சந்த செவன, மிஹிஜய செவன, மோதர ரன்மிண செவன, சிரிசந்த உயன தெமட்டகொட மற்றும் மாளிகாவத்தை என்.எச்.எஸ். வீடமைப்பு திட்டம் என்பவற்றுக்கு மேற்கூறப்பட்டவாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00