(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நெருக்கடிக்குள்ளான வியாபார நடவடிக்கைகளை மீள வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடன் செயற்திட்டத்தின் சலுகைக்காலம் 6 மாநங்களிலிருந்து 9 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நெருக்கடிக்குள்ளான வியாபார நடவடிக்கைகளை மீள வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி அரசாங்கத்துடன் இணைந்து கடன்வழங்கல் செயற்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது.
4 சதவீத வருடாந்த வட்டியுடன் 6 மாத சலுகைக்காலமும் உள்ளடங்கிய இந்தக் கடன்திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன்கள் 24 மாதங்களுக்குள் திருப்பிச்செலுத்தப்பட வேண்டும்.
கொவிட் - 19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நிவாரணம் எனப் பெயரிடப்பட்ட இந்தக் கடன் வழங்கல் செயற்திட்டம் மூன்று கட்டங்களாக செயற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எது எவ்வாறெனுனும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை காரணமாக, ஏற்கனவே கடன்பெற்ற பல தொழில் முயற்சியாளர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் வலுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே கடனை மீளச்செலுத்துவதிலும் அவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால், அவர்களுக்கு உதவும் நோக்கில் சலுகைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேற்குறிப்பிட்ட கடன் செயற்திட்டத்தின் கீழ் கடன்பெற்ற தொழில் முயற்சியாளர்கள், கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மேலும் 3 மாத சலுகைக்காலம் வழங்கப்படும்.
எனவே இக்கடனைப் பெற்றுக்கொண்டவர்கள் அந்தந்த வங்கிகளில் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்து மேலும் 3 மாத சலுகைக்காலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM