மன்னார் கிராம அலுவலகர் கொலையின் பின்னணியிலுள்ளோர் கைதுசெய்யப்பட வேண்டும் - செல்வம்

Published By: Digital Desk 4

05 Nov, 2020 | 08:02 PM
image

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான  பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைப் கடவை கிராம அலுவலகர் எஸ்.விஜியேந்திரன் (வயது-55)  என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மனிதாபிமானத்திற்கு அப்பால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது படுகொலை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு இன்று  வியாழக்கிழமை(5) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான  பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைப் கடவை கிராம அலுவலகர் எஸ்.விஜியேந்திரன் என்வரின் கொலையை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.

 இவ்வாறான கொடூரமான படு கொலைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. இவ்வாறான படுகொலைக் கலாச்சாரம் நமது மண்ணிலிருந்து கலைந்தெறியப்பட வேண்டும்.

இவ்வாறான கொலை அன்மைக்காலங்களில் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வருவதை நான் அவதானித்து வருக்கின்றேன்.

குறித்த சம்பவங்கள் சட்டம், ஒழுங்கு சார் பிரச்சினையை தோற்றுவிப்பதோடு எமது பகுதியில் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் என்பதனையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

மேலும் இந்த கொலையின் பின்னனியில் உள்ள நபர்கள் யார்? என்பதனை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தன்டனை வழங்க வேண்டும். என அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க மூத்த...

2026-01-25 12:26:18
news-image

வெப்பநிலை குறைவடைந்துள்ள போதிலும் நுவரெலியாவில் குவியும்...

2026-01-25 12:24:55
news-image

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக...

2026-01-25 12:03:42
news-image

பெரகல வனப்பகுதியில் பெண் கொலை :...

2026-01-25 11:58:42
news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 12:04:52
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18