பதுளை மேல் நீதிமன்ற வழக்கொன்றிற்கு ஆஜரான இரகசிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா

Published By: Digital Desk 4

05 Nov, 2020 | 01:35 PM
image

பதுளை மேல் நீதிமன்றின் வழக்கொன்றிற்கு ஆஜராகிய இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனால் பதுளை நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர், கொழும்பிலிருந்து பதுளை சென்று பதுளை மேல் நீதிமன்ற வழக்கொன்றிற்கு நேற்று ஆஜராகியிருந்தார். 

இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டத்தனால் அவர் உடன் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். அப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பதுளை மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், பசறை சுற்றுலா நீதிமன்றம், பதுளை தொழில் மன்றம் ஆகியவற்றின் கடமைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கமைய பதுளை மேல் நீதிமன்ற வழக்குகள் அடுத்தமாதம் 18  ஆம் திகதியும் (18-12-2020) அதைத் தொடர்ந்த திகதிகளிலும் ஏனைய நீதவான் நீதிமன்ற வழக்குகள் அடுத்தமாதம் 15 ஆட் திகதியும் (15-12-2020), அதற்குப் பின்வரும் திகதிகளிலும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

இத்தகவல்களை பதுளை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி கந்தசாமி இரமேஸ்குமார் தெரிவித்தார்.

மேற்கண்ட நீதிமன்றங்களின் வழக்குகள் அனைத்திற்கும் பதுளை சட்டத்தரணிகள் குழுவினரே ஆஜராவதனால், தொற்று அச்சுறுத்தலின் பாதுகாப்பு கருதி பதுளை நீதிமன்ற கடமைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரகசிய பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி பசறை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43