வெற்றிமாறனுடன் இணையும் சசிகுமார்

Published By: Digital Desk 4

05 Nov, 2020 | 11:39 AM
image

'அசுரன்' பட இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை', 'வடசென்னை', 'அசுரன்' என வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன், தற்போது சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதனிடையே அவர் கதை, திரைக்கதை எழுதும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசனுடன் இணைந்து வெற்றிமாறன் தயாரிக்கிறார்.

இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஐயப்பனும் கோஷியும்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் இல்லை என்றும், சசிகுமாருக்காக எழுதப்பட்ட புதிய பாணியிலான திரைக்கதை இது என்றும் படக்குழுவினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். இப்படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கிராமத்து நாயகன்' சசிகுமாரும், மண்ணின் மணத்தை திரைக்கதையில் கமழச் செய்யும் வெற்றிமாறனும் இணைந்திருப்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தற்போதே உருவாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right