நாட்டில் நீதி நியாயம் இருந்தால் நான் விடுதலையாவேன் - ரிஷாத் நம்பிக்கை

03 Nov, 2020 | 09:26 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

என் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்த குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய். நாட்டில் நீதி நியாயம் இருக்குமாக இருந்தால் நான் விடுதலையாகுவேன் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைருமாள ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் முன்வைக்கப்பட்டிருந்த மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எந்த ஒரு குற்றமும் செய்யாமல் புலம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க சென்றார்கள் என்ற ஒரு காரணத்தை வைத்து அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இன்று நான் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றேன். 

இந்த வேளையில் சிறையில் இருந்து வந்து இங்கு பேசிக் கொண்டிருக்கின்றேன். 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 30 வருடமாக வாக்களிக்க சென்று வந்திருக்கின்றார்கள். 

ஆனால் இந்த முறை மாத்திரம் அவர்கள் வாக்களிக்கச் சென்ற விடயத்தை  பெரிதுபடுத்தி அதற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தேன் என்ற காரணத்துக்காக என்னை என்று சிறையிலடைத்து இருக்கின்றார்கள். 

என்றாலும் இந்த நாட்டில் நீதி நியாயம் இருக்குமாக இருந்தால் நான் விடுதலையாகுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. எனக்கு நடந்த இந்த அநியாயத்தை, படைத்த அல்லாஹ்விடத்தில் ஓப்படைத்தவனாக என் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் ஆகும்.

ஏனென்றால் அம்மக்களை சொந்த மண்ணிலேயே வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்று அந்த மக்கள் விடுத்த வேண்டுகோளை இந்த நாட்டினுடைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் எழுத்து மூலமாக எழுதி இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டபோது, அவர் இது உங்களுடைய அமைச்சுக்கு கீழ் உள்ள விடயம். 

எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எனக்கு கீழே இருந்த எனது அமைச்சின் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன் பிறகு இது சம்பந்தமான நிதியினை அதிகாரிகள் கேட்கின்றார்கள்.

எனவே அதற்கு போதுமான நிதி தர முடியுமா? என்று நிதி அமைச்சராக இருந்த  மங்கள சமரவீரவிடம் கேட்டபோது, அவர் உடனே நான் அதனை அனுமதிக்கிறேன்,  முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று நிதி அமைச்சர் அனுமதித்திருந்தார்.

 அந்த இரண்டு கடிதங்களையும்  பணிப்பாளருக்கும், செயலாளருக்கும் அனுப்பி வைத்தேன். இதைத்தவிர நான் எந்தத் தவறையும் செய்யாமல் அநியாயமாக இன்று வரை 14,15 நாட்களாக  சிறையிலே அடைக்கப்பட்டிருக்கின்றேன்.

எனவே இந்த நாட்டிலேயே நீதி, நியாயமாக நடக்கின்ற நம்பிக்கை எனக்குள்ளே இருக்கின்ற காரணத்தினால் எனக்கு நீதி கிடைக்கும், விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. எனவே எனக்கு நடந்த அநியாயத்தை அல்லாஹ்விடத்தில் முன்வைக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33