இ ன்று உலகில் தோன்றும் நோய்கள் அனைத்துமே எல்லா ஜீவராசிகளையும் அச்சுறுத்தும் ஒன்றாகவே அமைந்து விடுகின்றன.. ஆயிரம் கண்டுபிடிப்புகள் அவதாரமாக தோன்றினாலும், அனைத்தையும் சவாலுக்குட்படுத்தும் நோய்கள் புதிது புதிதாக தோன்றத்தான் செய்கின்றன. அந்தவகையில், கடந்த 7 ஆம் திகதி சுகாதாரக் கல்வி பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கானது பல தசாப்த வரலாற்றை கொண்ட யானைக்கால் நோய் பற்றியதாக அமைந்தது.
அந்தவகையில், உலகளவில் 81 நாடுகளில் இந்நோயின் தாக்கம் காணப்படும் அதேவேளை, 120 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், இந்தோனேஷியா. தாய்லாந்து, மாலை தீவு, மியன்மார் உள்ளிட்ட தென்னாசிய நாடுகளிலேயே இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தென்னாசியாவிலுள்ள ஏனைய நாடுகளை விடவும் இலங்கையிலும், மாலைதீவிலும் தற்போது இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. என்றாலும் இலங்கையில் வட மேல் மாகாணத்தில் புத்தளம், குருநாகல் ஆகிய இரு மாவட்டங்களிலும், மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், தென் மாகாணத்தில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்களாக எட்டு மாவட்டங்களிலும் யானைக்கால் நோய் அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளன. குறிப்பாக ஏனைய மாவட்டங்களை காட்டிலும் காலி மாவட்டத்தில் இந்நோயின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளதென வைத்திய தரப்பினர் தெரிவித்தனர்..
பொதுவாக யானைக்கால் நோய்க்காரணி தொற்றுக்கு உள்ளான சகலருக்கும் அதற்கான அறிகுறிகள் உடன் வெளிப்படாது. இந்நோய் அறிகுறிகள் சிலருக்கு உடனடியாகவும் பலருக்குக் காலதாமதமாகியும் வெளிப்படலாம். சிலருக்கு வெளிப்படாமலும் போகலாம். இந்நோயின் தாக்கத்துக்கு ஆளாகும் ஒருவரின் உடல் அவயவங்களில் விகாரங்கள் ஏற்படுவதுடன் உடலும் பலவீனமடையும். இவையே இந்நோயின் பிரதான பண்புகளாக விளங்குகின்றன. அந்தவகையில், யானைக்கால் நோய்க்கு இரு வகையான பைலேரியாப் புழுக்களே அடிப்படைக் காரணிகளாக உள்ளன. அவற்றில் ஒன்று கியூலெக்ஸ் நுளம்புகளால் பரப்பப்படும் உச்சேரிரியா பெனரொப்டி (Wuchereria banerofti) புழு. இப்புழுவைக் காவிப் பரப்பும் நுளம்புகள் நீர் தேங்கி அசுத்தமடைந்திருக்கும் பகுதியிலேயே முட்டையிட்டு பல்கிப் பெருகும். அதாவது தண்ணீர் தேங்கி அசுத்தமடைந்திருக்கும் கால்வாய்கள், உடைந்துள்ள மலசலக்கூடங்கள் என்பன இவ்வகையான நுளம்புகள் பெருக ஏற்புடைய சூழலாகும்.
மற்றொரு வகை நுளம்பு தான் மன்சோனியா (Mansonia) இந்நுளம்பு ப்ருகியா மலாயி (Brugia Malayi) என்ற பைலேரியா புழுவைப் பரப்புகின்றது. இவ்வின நுளம்புகள் சல்வீனியா மற்றும் பிஸ்டியா செடிகள் போன்ற நீர்த் தாவரப் பிரதேசங்களில் முட்டையிட்டு பல்கிப் பெருகுகின்றன. யானைக்கால் நோயின் மூல காரணியைப் பரப்பும் இவ்விரு வகை நுளம்புகளும் தான் இலங்கையில் காணப்படுவதாக வைத்திய தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
யானைக்கால் நோய்க்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு உடனடி அறிகுறிகளாக காய்ச்சல், தசை வலி, உடல் தோலில் வேதனையுடனான சிவப்பு தழும்புகள் வெளிப்படுதல், நிணநீர் முடிச்சுக்களில் வீக்கம், குறிப்பாக அக்குள் மற்றும் தொடை இடுக்கு பகுதிகளில் வீக்கம் ஏற்படும். நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள அவயவங்கள் சார்ந்த பகுதிகளில் வேதனையுடன் கூடிய வீக்கமும் காணப்படும். குறிப்பாக கை, கால் மூட்டுக்கள் பெண்களுக்கு மார்பகங்களிலும் ஆண்களுக்கு விதையிலும் லேசான வீக்கம் ஏற்படும். இவ்வாறான உடனடி அறிகுறிகள் வெளிப்பட்டாலும் தென்படாத நாட்பட்ட அறிகுறிகளும் உண்டு.
நாட்பட்ட அறிகுறிகளாவன
* மார்பு, கை, கால் மூட்டுகளில் வீக்கம்.(பெண்களுக்கு மார்பகங்களிலும் ஆண்களுக்கு விதையிலும் லேசான வீக்கம் ஏற்படும்)
* களங்களின் இயற்கைத் தோற்றப்பாடு மாற்றமடைந்து உடல் அவயவங்கள் விகாரமடையும்.
இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 32 பேர் குறித்த எட்டு மாவட்டங்களிலிருந்து இனங்காணப்பட்டிருக்கும் அதேவேளை, 24 பேர் காலி மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். கடந்த ஆண்டை பொறுத்தமட்டில் 98 பேர் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர். 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 171 இலிருந்து 98 பேராக குறைந்துள்ளது. அந்தவகையில் கடந்த வருடத்தில் ஒருவித வீழ்ச்சி காணப்பட்டாலும் முழுமையாக இந்நோயிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
இந்நோய்க்கான சிகிச்சையின் போது பின்வரும் மாத்திரைகளை உட்கொள்வதால் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்திக்கொள்ளலாமென வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.
அவையாவன:
* டி. ஈ. சி.(DEC)
(டைத்தில் காபமேசின் சிட்ரேட்- Diethylcarbamazine citrate )
* அல்பெண்டேசோல் (Albendazole)
இம் மாத்திரைகளை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் ஏதாவது உணவை உட்கொண்ட பின்னரே பாவிக்க வேண்டும். இல்லாவிடில் வயிறு எரிவு, தலை சுற்று போன்றவாறான பக்க விளைவுகள் இம் மாத்திரைகளால் ஏற்படலாம். அதேநேரம் இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், இரு வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மாருக்கும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற நாட்பட்ட நோயாளர்களுக்கு இம் மாத்திரைகள் வழங்கப்படக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களும் சற்று அவதானமாக செயற்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM