தமிழ் திரை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும், இயக்குனராகவும் வலம் வரும் சமுத்திரகனி, சுந்தர் சி இயக்கத்தில் தயாராகும் 'நாங்க ரொம்ப பிஸி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

'வீராப்பு' படத்தை இயக்கிய இயக்குனர் பத்ரி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாங்க ரொம்ப பிஸி'. இந்தப் படத்தில் நடிகர்கள் ஷாம், பிரசன்னா, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், இயக்குனர் ஆர் என் ஆர் மனோகர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, நடிகைகள் ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடிக்கிறார்கள்.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, சி சத்யா இசையமைத்து வருகிறார். இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கும் இப்படத்தில் முன்னணி குணச்சித்திர நடிகரான சமுத்திரகனி கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

2016 ஆம் ஆண்டில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மாயாபஜார்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் இது என்பதும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்னிட்டு நடுத்தர குடும்பங்களில் ஏற்பட்ட தாக்கத்தை மையப்படுத்தி தயாராகும் 'நாங்க ரொம்ப பிஸி' திரைப்படம், தீபாவளி திருநாள் அன்று சன் ரிவியில் நேரடியாக வெளியாகவிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பரபரப்பாக நடித்து வரும் குணச்சித்திர நடிகரான சமுத்திரக்கனி, இயக்குனர் சுந்தர் சி யின் வேண்டுகோளுக்கிணங்க இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிய வருகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM