மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதாரப் பரிவிற்குட்பட்ட, களுதாவளை 4 ஆம் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிற்கு மேசன் வேலைக்காக சென்று வருகைதந்திருந்த நிலையில், களுதாவளையில் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த நபருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதற்குரிய பெறுபேறு நேற்று சனிக்கிழமை (31) மாலை வெளிவந்துள்ளது. இந்நிலையில் குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் மேற்கு மற்றும், போரதீவுப் பற்று பிரதேசங்களைச் சேர்ந்த தல ஒவ்வொருவர் கொரோனாத் தொற்றுக்கு உட்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
எனினும் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பெரியபோரதீவு, பட்டாபுரம், மற்றும், மண்முனை தென் மேற்று பிரதேசத்தின் முhவடிமுன்மாரி ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறையினர், பொலிசார், மற்றும் இராணுவத்தினர், இணைந்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதையும் அதவானிக்க முடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM