இந்தியாவில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா கிராமத்தை சேர்ந்த 6 மாணவர்கள் நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
6 மாணவர்கள் கிராமத்திலுள்ள மக்களோடு சுற்றுலா சென்ற வேளை நீரோடையில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மாணவர்கள் 6 பேரும் நீரோடையில் மூழ்கியுள்ளனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீரோடைக்குள் இறங்கி மாணவர்களை தேடினர். இதற்கிடையில் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸாரும் மாணவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவர்கள் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 2 சிறுவர்களின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM