நீரில் மூழ்கி 6 மாணவர்கள் பலி - இந்தியாவில் பரிதாபம்

Published By: Digital Desk 3

29 Oct, 2020 | 05:41 PM
image

இந்தியாவில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா கிராமத்தை சேர்ந்த 6 மாணவர்கள் நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

6 மாணவர்கள்  கிராமத்திலுள்ள மக்களோடு சுற்றுலா சென்ற வேளை  நீரோடையில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மாணவர்கள் 6 பேரும் நீரோடையில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீரோடைக்குள் இறங்கி மாணவர்களை தேடினர். இதற்கிடையில் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸாரும் மாணவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவர்கள் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 2 சிறுவர்களின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47