பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற குடியேற்றவாசிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானை சேர்ந்த 35 வயதான கணவன், 35 வயதுடைய மனைவி, மற்றும் அவர்களின் ஒன்பது, ஆறு மற்றும் ஒருவயது குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்னர்.
ஒகஸ்ட் மாத்தின் ஆரம்பத்தில் சிறந்த எதிர்காலத்தை அடையும் நோக்கில், பிரித்தானியா நோக்கி குறித்த குடும்பம் ஆட்கடத்தல் காரர்களின் உதவியுடன் படகில் பயணித்துள்ளது.
ஈரானில் இருந்து படகின் மூலம் துருக்கியை அடைந்து அங்கிருந்து இத்தாலிக்கு பயணித்து மீண்டும் பிரான்ஸ் ஊடாக பிரித்தானியாவை அடைய முயன்றுள்ளனர்.
பிரான்ஸிலிருந்து படகில் பயணித்து சேனலைக் கடக்க முயன்ற போது 57 மைல் வேகத்தில் காற்று விசியதையடுத்து எழுந்த ஐந்து அடி அலைகளினால் தாக்கப்பட்டு அவர்கள் பயணித்த, தற்காலிக மீன்பிடி படகு கவிழ்ந்துள்ளது.
இதனையடுத்து படகில் பயணித்த ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒருவயது குழந்தை காணாமல் போய்யுள்ளது.
இவர்கள், பிரித்தானியாவை நெருங்கியவுடன் சேனலைக் கடக்க முன்னர் கடத்தல்காரர்களுக்கு செலுத்த வேண்டிய 6 21,600 பவுண்டு பணத்தையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் துரதிர்ஷ்டவசமான பயணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸில் எடுத்து கொண்ட இறுதியான படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளன.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM