பிரேஸில் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ தான், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
40 வயதான ரொனால்டினே தற்போது அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.
பிரேஸில் அணி 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் ரொனால்டினோ.
பிரேஸிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும் வென்றுள்ளார்.
மேலும், உலகப் புகழ் பெற்ற பார்சிலோனா அணியிலும் இவர் விளையாடியுள்ளார்.
பராகுவே நாட்டிற்குள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நுழைய முயன்ற குற்றச்சாட்டுக்காக ரொால்டினோவும் அவரது சகோதரர் ரோபர்டோவும் கடந்த மார்ச் மாதத்தில் கைதானமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM