தலவாக்கலை பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால தெரிவித்தார்.
தலவாக்கலை தெவிசிறிபுர பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கதக்க ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இவர் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இவருக்கு 24.10.2020 சனிக்கிழமையன்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பீ.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியானபோது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவரின் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த மாணவி ஒருவர் க.பொ. உயர் தர பரீட்சைக்கு தோற்றுகின்றார். இவர் தனிமைப்படுத்தப்பட்டு கொட்டக்கலை பிரதேச சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தலவாக்கலை பொலிஸாரின் வழிகாட்டலுக்கமைவாக பரீட்சைக்கு தோற்றுகின்றார்.
எனவே தலவாக்கலை நகரை அண்டிய மக்கள் வீணாக அச்சம் அடைய தேவையில்லை என தெரிவித்த தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான வாய்ப்புகள் இதுவரை ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM