இறந்தவரின் உடலில் 18 மணி நேரத்திற்குப் பிறகும் செயல்படும் கொரோனா வைரஸ்!

Published By: Jayanthy

26 Oct, 2020 | 01:21 AM
image

கொரோனா வைரஸ் தொற்றால்  இறந்தவரின்  உடலில் பிரேத பரிசோதனையின் பின் 18 மணி நேரத்திற்குப் பிறகும் வைரஸ் உயிருடன்  இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பெங்களூரில், கொரோனாவால் உயிரிழந்த 62 வயது நபரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட  மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்து 18 மணி நேரத்திற்குப் பிறகு வாய், தொண்டை மற்றும் நாசி பகுதியில் வைரஸ் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. 

Coronavirus: Why 'superspreaders' may make COVID-19 easier to control |  Euronews

பெங்களூரில், ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தடயவியல் வைத்தியர் துறையின் தலைவராக இருந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ், மேற்கொண்ட பரிசோனையிலேயே இது தெரியவந்துள்ளது.

இவ் பிரேத பரிசோதனை  குறித்து, 

“நோய் செயல்முறை மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கும், சிகிச்சை நெறிமுறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று படிப்பதற்கும் நான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டேன். நான் இறந்தவரின் வாய், தொண்டை மற்றும் மூக்கிலிருந்து எடுத்த பல்வேறு துணிக்கைகளில்,  ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனையில் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டன, அதே நேரத்தில் முகம், கழுத்து அல்லது சுவாசப் பாதை மற்றும் நுரையீரல் போன்ற உள் உறுப்புகளின் தோலில் வைரஸின் எந்த தடயமும் இல்லை. ஏனென்றால் நுரையீரல் மேற்பரப்பு பாக்டீரியா தொற்றுகளால் ஆதிக்கம் செலுத்தியது, ”என்று வைத்தியர் ராவ் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  “பொதுவாக மென்மையான கடற்பாசி பந்து போன்ற நுரையீரல் தோல் பந்து போன்றது. அவை பொதுவாக 600-700 கிராம் எடையுள்ளவை, ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் நுரையீரல் ஒன்று  2,180 கிராம் எடையும், அமைப்பும் தோலின் நிறமும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரத்தக் கட்டிகள் இருந்தன, காற்றுப் பைகள் சிதைந்தன. வைரஸ் நுரையீரலுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை  பார்த்து அதிர்ச்சியாக இருந்தது, ”என்றார்.

மேலும், இந்த கண்டுபிடிப்புகள் மூலம் அனைத்து COVID-19 உடல்களும் தகனம் செய்யப்பட வேண்டும், அவை குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்படக்கூடாது என்று அவர் கூறினார்.

இவ் பரிசோதனையை மேற்கொள்ள அவருடன் உதவ யாரும் முன்வராததால்  தனியாக சுமார் 1 மணி 10 நிமிடம் நேர பிரேத பரிசோதனை நடத்தியுள்ளார் வைத்தியர், எனினும் உடலைத் தூக்கி பிரேத பரிசோதனை மேசையில் வைப்பதற்கு மட்டும் ஒருவரின்  உதவியை பெற்றுகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

-த இந்து

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36