(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் போது, எமது இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை நீக்கும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் விசேட கூற்றொன்றை எழுப்பிய வேளையில் இந்த விடயங்களை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் வேளையில் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சரிடமும், ஜனாதிபதி, பிரதமரிடமும் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன்.
எமது நாட்டின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. எனவே பொம்பியோவுடனான பேச்சுவார்த்தைகளின் போது எமது இராணுவத் தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வலியிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விடயத்தில் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கவோ வேறு வழிகளில் தொடர்பு கொள்ளவோ அவசியம் இல்லை.
அவர் இலங்கைக்கு வருகின்றார், நேருக்கு நேராக அவரை சந்திக்கப்போகின்றீர்கள். எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முன்னர் அவரிடம் இருந்து வாக்குறுதி ஒன்றினை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM