சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 5 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கோவிலின் ஆச்சாரப்படி இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடையை விலக்க வேண்டும் என்றும் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றிம் சபரிமலை கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியது. மேலும் கடவுள், ஆண்-பெண் என பாகுபாடு பார்க்காத போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட தடை வியப்பை அளிக்கிறது என்றும் கூறி இருந்தது. இது தொடர்பாக கேரள அரசு நீதிமன்றில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது.
கேரளாவில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது? என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியானது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்ற கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது,
சபரிமலை கோவில் தொடர்பான வழக்கில், அந்த கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றில் இடதுசாரி கூட்டணி அரசு கடந்த 2007ஆம் ஆண்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டது. ஒரு கோவிலில் நுழைவது என்பது மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் தொடர்பான விஷயமாகும். இது தொடர்பாக மக்கள் சமூகத்துடன் விவாதிக்க வேண்டும் என அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM